Saturday, April 4, 2009

A small story which worth lot

மிகவும் பரபரப்பானதொரு காலைப் பொழுதில் கண்ணில்லாத சிறுவன் ஒருவன் நடைபாதையில் நடந்து வந்தான். தான் கொண்டு வந்த பலகையில், "எனக்குக் கண்கள் இல்லை. அதனால் எனக்கு உதவுங்கள்" என்று எழுதி நடைபாதையில் போய் வரும் அனைவரும் பார்க்கும் வகையில் வைத்தான். அவன் மேல் பரிதாபம் கொண்ட சிலர் அவன் முன்னிருந்த விரிப்பில் சில்லறைகள் இட்டனர்.

அப்போது அவ்வழியே சென்ற மனிதன் தன்னிடமிருந்த பணத்தை விரிப்பிலிட்டான். அச்சிறுவன் வைத்திருந்த பலகையின் மறுபுறம் வேறு சில வார்த்தைகள் எழுதி அனைவரும் பார்க்கும் விதமாக வைத்தான். பிறகு அந்த வழியே சென்றுவிட்டான்.

அதன் பிறகு அவ்வழியே சென்ற அனைவரும் சிறுவனின் விரிப்பில் பணமிட ஆரம்பித்தனர். தான் எழுதிய வார்த்தைகள் எந்த அளவு சிறுவனுக்கு உதவியது என்றறிய மாலையில் மீண்டும் அவ்வழியே வந்தான் அம்மனிதன். பொதுவாக உடல் ஊனமுற்றவர்களுக்கு மற்ற புலன்களனைத்தும் மிகவும் சக்தி வாய்ந்ததாகயிருக்கும். அம்மனிதனின் காலடிகள் மூலம் அவன் வருகையை அறிந்து கொண்டான் சிறுவன்.

"காலையில் நீங்கள் எதையோ பலகையில் எழுதிய பிறகுதான் அனைவரும் எனக்கு உதவினார்கள். அனைவரும் உதவும் வகையில் அப்படி அதில் என்ன எழுதினீர்கள்?" என்று கேட்டான். அதற்கு அவன், "நீ எழுதியதையேதான் நானும் எழுதினேன். ஆனால் கொஞ்சம் மாற்றி எழுதியிருக்கிறேன். பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை" என்றான். அம்மனிதன் எழுதியது,

"இன்றைய தினம் மிகவும் அருமையாக விடிந்துள்ளது.
ஆனபோதும் என்னால் அதை ரசிக்க முடியவில்லை"

சிறுவனும், மனிதனும் சொல்லும் விஷயம் என்னவோ ஒன்றுதான். சிறுவனுக்கு பார்வையில்லை என்பதையேதான் இருவரும் சொல்கிறார்கள். ஆனால் அதைச் சொல்லும் விதத்தில் வேறுபடுகிறார்கள். சிறுவன் முதலில் மற்றவர்களை உதவிடுமாறு எழுதியிருந்தான். ஆனால், அம்மனிதன் எழுதியதோ, மற்றவர்களால் பார்த்து ரசிக்க முடிந்த ஒன்றைப் பார்வையில்லாத காரணத்தால் சிறுவனால் ரசிக்க முடியவில்லை என்பதாக இருந்தது.

நீங்கள் சொல்ல வருவது அனைவராலும் ஒப்புக்கொள்ளக் கூடியதாக இருக்கலாம். ஆனால் சொல்லும் விதத்தில் சொல்வதால் மட்டுமே உரிய பலனை அடைவீர்கள்.

இதன் மூலம் நாம் அறிய வரும் முத்தான மூன்று கருத்துக்கள் :

* மற்றவர்களிடம் இல்லாத பல அரிய விஷயங்களை நமக்களித்த கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்.
* உங்களால் இயன்ற வரையில் மற்றவர்களுக்கு உதவிடுங்கள்.
* எதையும் வித்தியாசமான கண்ணோட்டத்தில் அணுகிடுங்கள். ஆக்கப்பூர்வமாக சிந்தித்திடுங்கள். பிரச்சனைக்குத் தீர்வு காண வழிகள் பல உண்டு என்று காண்பீர்கள்.

உங்கள் வீட்டில் பணம் செழிக்க..

கடந்த சில மாதங்களாக உலகளவில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி எல்லோரையும் பயமுறுத்தி வருகிறது. இன்று இருக்கும் வேலை, நாளை இருக்குமா என்ற சந்தேகத்திலேயே பலர் நாட்களை கடத்துகின்றனர். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் கை கொடுப்பது சேமிப்பு பழக்கம்தான்! சேமிப்பு என்பது பணம் மட்டுமல்ல.. அது பல வழிகளிலும் இருக்கலாம். இதோ, நிரூபிக்கப்பட்ட 25 ரகசியங்கள்..

1. வங்கிகளில் இருக்கும் பணம்..
சாதாரணமாக சேமிப்பு என்றதும், வங்கியில் ஒரு சேமிப்பு கணக்கு தொடங்கி அதில் பணம் போட்டு வருவதுதான் நினைவுக்கு வரும். ஆனால், சேமிக்கும் பணம் முழுவதும் சேமிப்புக் கணக்கிலேயே இருந்தால் அது எந்தவிதமான பயனையும் தராது. அவசரத் தேவைக்கு எவ்வளவு பணம் தேவையோ அதை மட்டும் சேமிப்புக் கணக்கில் வைத்துவிட்டு, மீதமுள்ள பணத்தை பிக்சட் டெபாசிட்டில் போடுவதுதான் உத்தமமான காரியம். அது, அதிக வட்டி மற்றும் வருமானத்தைப் பெற்றுத் தருவதால் பணம் பெருக வழி வகுக்கும். பல வங்கிகளில் ‘ஃப்ளெக்ஸி டெபாசிட்’ என்று உள்ளது. அதில் போட்டு வைத்தால் அவர்களே நிரந்தர வைப்புக் கணக்கிற்கு மாற்றி விடுவார்கள்.
2. ரெகரிங் டெபாசிட் நல்ல சாய்ஸ்!
மாதாமாதம் ஒரு சிறிய தொகையை ரெகரிங் டெபாசிட்டில் போட்டால் அது வளரும் விதத்தைப் பார்த்தால், உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். ஒரு சிறிய உதாரணம்.. ‘மாதம் 500 ரூபாய் 20 வருடத்திற்கு போட்டு வருவீர்கள்; அது 10 சதவீதம் வட்டி பெறுகிறது’ என்று வைத்துக்கொண்டால், அந்த 20 வருடம் முடிவில் உங்களுக்கு கிடைக்கும் தொகை எவ்வளவு தெரியுமா? சுமார் 3,78,000 ரூபாய்-. நம்ப முடிகிறதா? சேமிப்புக்கு ரெகரிங் டெபாசிட் நல்ல சாய்ஸ்!
3. ஆன்லைன் வங்கி வசதியை பயன்படுத்துங்கள்!
பல வங்கிகளில் ஆன்லைன் பாங்கிங் வசதி உள்ளது. அதைப் பெற்றுக்கொண்டு விட்டால் அதன் மூலமாகவே கிரெடிட்கார்டு பில், டெலிபோன் பில், எலக்டிரிசிட்டி பில் போன்ற பல பில்களையும் கட்டிவிடலாம். இதனால், செக் எழுதி அதைக் கொண்டு போய் போட ஆகும் போக்குவரத்து செலவு, கியூவில் நிற்கும் நேரம்.. எல்லாமே மிச்சம்!
4. வங்கிக் கடனில் வாங்குங்கள் வீடு!
வீடு வாங்குவது என்றால், வங்கிக் கடன் பெறுவது நல்லது. அதன் வட்டியின்மீது கிடைக்கும் வருமான வரிச் சலுகையே ஒரு வகையில் பெரிய ஒரு சேமிப்புதான்!
5. மருத்துவ இன்ஸ்யூரன்ஸ் அவசியம்!
உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனம் மருத்துவ இன்ஸ்யூரன்ஸ் எடுத்திருந்தால் நலம். இல்லாவிடில் கட்டாயம் இன்ஸ்யூரன்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள். மருத்துவ இன்ஸ்யூரன்ஸ் இல்லாத பட்சத்தில் இன்றைய சூழலில் குடும்பத்தில் ஒருவருக்கு ஏதாவது ஆகிவிட்டால் காலம் காலமாக சேமித்து வைத்திருந்த பணமெல்லாமே காணாமல் போகிவிடும். உஷார்! மேலும், இதற்காக செலுத்தும் இன்ஸ்யூரன்ஸ் பிரிமியம் தொகைக்கு 15,000 ரூபாய் வரை வருமான வரிச் சலுகையும் கிடைக்கும்.
6. கிரெடிட் கார்டில் கவனம் தேவை!
கிரெடிட் கார்டு வைத்திருப்பதால் உள்ள பலன்கள், அதன் டியூ கட்டுவதில் ஒரு முறை தாமதமாகி அபராதம் கட்டினாலே காலியாகி விடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கிரெடிட் கார்டு செலவுகளை தனியாக எழுதி வைத்து, மாதம் ஒரு முறை அதற்கான தவணை தேதிக்கு முன்னர் கட்டிவிட மறக்கவேண்டாம்.
7. காய்கறி, மளிகை சாமான்கள்..
நமது மாதாந்திர பட்ஜெட்டில் முக்கிய இடம் பெறுவது காய்கறி, மளிகை சாமான்கள் தான். அதில் மிச்சம் பிடித் தாலே நிறைய ரூபாய் சேமிக்க முடியும். சோம்பேறித்தனம் காரணமாக, விலை சிறிது அதிகம் இருந்தாலும் அருகில் உள்ள கடைகளிலேயே காய்கறிகள் வாங்குகிறோம். இதில் தினசரி 3 ரூபாய் கூடுதலாக கொடுக்கிறோம் என்றாலும், வருடத்திற்கு 1. ,080 ரூபாய் நஷ்டம்! இதையே 25 வருடங்களுக்கு வட்டியோடு கணக்கு போட்டால்.. மூன்று லட்ச ரூபாய்க்கு மேல் வரும். நடந்துசென்று அருகிலுள்ள மார்க்கெட்டில் வாங்கினால் பர்ஸுக்கும் நல்லது. உடம்புக்கும் நல்லது.
8. லிமிடெட் பிக்னிக்!
இன்றைய இளைய தலைமுறை ஒவ்வொரு வார இறுதியிலும் பிக்னிக் செல்வது, அதுவும் தங்களுடைய சொந்த பைக் அல்லது கார்களிலேயே செல்வது வாடிக்கையாகி விட்டது. பிக்னிக் வேண்டாம் என்பதில்லை. வாரம் ஒரு முறை என்பதை மாதம் ஒரு முறை என்று மாற்றிக் கொள்ளலாம். அதுவே நல்ல சேமிப்பை தரும்.
9. நடக்கலாம்..தப்பில்லை!
தற்போது சிறிய தூரத்திற்குகூட ஆட்டோ என்று கூப்பிடும் அளவிற்கு வந்துவிட்டோம். பஸ்சுக்குகூட நிற்பதில்லை. குறைந்த தூரத்திற்கு நடை.. சிறிது அதிகமான தூரத்திற்கு பஸ் என்று பழக்கப்படுத்திக் கொள்வது நல்லது. அதேசமயம், மூன்று பேர் போகும்போது ஆட்டோவில் செல்லலாம். 6 அல்லது 7 பேர் என்றால் கால் டாக்ஸியும் தவறில்லை.
10. பிராண்டட் சட்டையா..?
பெரிய கடைகளில் அட்டைப் பெட்டி களில் மடித்து வைக்கப்பட்டிருக்கும் பிராண்டட் சட்டைகளின் அழகில் அதன் அதிகபட்ச விலையை மறந்து விடுகிறோம். ஏன் கடையில் துணிகள் வாங்கி, தைத்து உடுத்தக் கூடாது. அது பெரிய அளவு சேமிப்பைத் தரும். ரெடிமேட் தான் எடுப்பேன் என்றால், தள்ளுபடி விற்பனைகளை கவனித்து எங்கு நல்ல தள்ளுபடி கிடைக்கிறது என்று பார்த்து வாங்குங்கள் (தள்ளுபடியில் வாங்குவது எல்லாம் மட்டமான சரக்கு என்ற எண்ணம் வேண்டாம். அதிகப்படியான சரக்குகள், தையலில் ஏற்பட்ட சிறிய தவறுகள் போன்று உள்ள ரெடிமேட் ஆடைகள்தான் தள்ளுபடி விற்பனைக்கு பெரும்பாலும் வரும்). தற்போது 50 சதவிகிதம் வரை தள்ளுபடியில் பல கம்பெனிகள் விற்பனை செய்கின்றன. அவற்றைத் தேடிப்பிடித்து வாங்குவது உசிதம்.
11. குழந்தைக்கு டிரெஸ் வாங்குகிறீர்களா?
குழந்தைகளுக்கு துணிமணிகள் வாங்கும்போது அவர்களையும் கூட்டிச் சென்று வாங்குவதுதான் உத்தமம். இந்தக் கால குழந்தைகள் முன்பு போல இல்லை. தங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் போடவே மாட்டார்கள். எதற்கு அநாவசிய செலவு?
12. கரன்ட் பில் ஷாக் அடிக்குமே!
கரன்ட்டை தொட்டால்கூட பலருக்கு ஷாக் அடிக்காது. மாதா மாதம் கரன்ட் பில் வந்தவுடன்தான் ஷாக் அடிக்கும். தேவையற்ற விளக்குகளை அணைத்து விடுவதே, பெரிய சேமிப்பை தரும். கிராமப் புறங்களில் மாடுகள் வைத்திருப்பவர்கள் கோபர் கேஸ் (சாண எரிவாயு) அமைத்து இன்னும் எரிபொருள் செலவுகளை மிச்சப் படுத்தலாம். ப்ளாட்டுக்களில் குடியிருப்பவர்கள் ‘சூரிய சக்தி’ பற்றி கட்டாயம் சிந்திக்க வேண்டும். இவற்றுக்கு அரசாங்க மானியங்களும் கிடைக்கின்றன.
13. டெலிபோன் உபயோகிக்கும்போது..
தற்போது குடும்ப பட்ஜெட்டில் பெரிய ஓட்டை போடுவதில் போன் பில்லுக்கும் பெரும் பங்கு உண்டு. ஆளுக்கு ஒரு மொபைல் போன்.. ஐந்து நிமிடம் தாமதமாக வந்தாலே பத்து போன் கால்கள்.. பில் எகிறாமல் என்ன செய்யும்? போன் செய்யும் முன்பு அந்த கால் அவசியம் தானா என்று யோசியுங்கள். வெளிநாடுகளுக்கு போன் செய்வதாக இருந்தால், இன்டர்நெட் மூலமாக பேசுவது செலவை குறைக்கும். இணைய பரிச்சயம் உள்ளவர்கள் முடிந்த அளவு ஈமெயில் பயன்படுத்தலாம். சொல்ல வேண்டியதை அழுத்தம் திருத்தமாகக் கூறவும் முடியும். செலவும் குறைவு.
14. புதிய ஃபர்னிச்சர் வாங்கப் போகிறீர்களா?
முன்பெல்லாம் வீட்டுக்கு பர்னிச்சர் வாங்குவது என்றால், அது காலா காலத்துக்கும் வரவேண்டும் என்று நினைப்போம். தேக்கு, கருங்காலி, ரோஸ் வுட் என்று பார்த்துப் பார்த்து வாங்கி, அதை நமது ஆசாரி ஒவ்வொரு இழையும், இழைக்கும்போதும் அருகில் இருந்து கவனிப்போம். இந்த வேகமான காலத்தில் நமக்கு ஆசாரி பின்னால் செல்ல நேரம் இல்லை. நமது ஆசாரி என்று சொல்லப் படுபவரும் தற்போது யாருக்கும் இல்லை. குறைந்தபட்சம் அடுத்த ஃபர்னிச்சர் வாங்கும்போதாவது, ‘வாங்கும் ஃபர்னிச்சர் ஐந்து வருடம் உழைத்தாலே போதும்; மறுபடி புதியது வாங்கிக் கொள்ளலாம்’ என்ற எண்ணத்தையாவது துறந்துவிட்டு, காலத்திற்கும் உழைக்குமா என்று பார்த்து வாங்குங்கள்.
15. வீட்டு வாடகையில் வருவாய்!
தற்போது போக்கு வரத்து வசதிகள் எவ்வளவோ மேம்படுத்தப்பட்டிருக் கின்றன. அதை வைத்து வீட்டு வாடகையைக் குறைக்கலாமே! சென்னையைப் பொறுத்தவரை, மின்சார ரயில்கள் நகரின் கடைசி வரை இணைக்கின்றன. நகரின் மத்தியில், ரயில் நிலையத் திலிருந்து தள்ளி குடியிருக்கிறீர்கள் என்றால், நகரின் கடைசிக்கு.. ஆனால், ரயில் நிலையத்துக்கு அருகில் வீட்டை மாற்றிக் கொள்வது நல்லது. நகரின் கடைசியில் இருந்தாலும், அந்த வீடு ரயில் நிலையத் திற்கு அருகிலேயே இருப்பதால், போக்கு வரத்து செலவு, பயண நேரம் இரண்டிலும் ஒரே செலவாகத்தான் இருக்கும். ஆனால், அங்கு நீங்கள் செலுத்தும் வீட்டு வாடகை குறைவாக இருக்கும். அது எவ்வளவு சேமிப்பை தருமே!
16. கையில் கூடுதலாக பணம் இருக்கிறதா? கடன்களை திருப்பிச் செலுத்துங்கள்!
கையில் அதிகப்படியான பணம் இருக்குமானால் வாங்கிய கடன்களை அடைப்பது நல்லது. கடன்கள் குறைந்தால் மனதில் சுமை குறையும். பணத்தை கையில் வைத்துக் கொள்வது மட்டுமல்ல.. கடனை அதிக வட்டியில் வைத்துக் கொள்வதும் ஆபத்துதானே!
17. விருந்துகள்.. வீட்டில் நடக்கட்டுமே!
‘நண்பர்களுக்கு விருந்து கொடுக்கிறேன்’ என்பது ஒரு பெரிய செலவுதான். பிறந்த நாள், கல்யாண நாள் என்று. ஏன் இவற்றையெல்லாம் வீட்டிலேயே கொண்டாடி மகிழக் கூடாது. வருபவர்களுக்கு ஏன் வீட்டிலேயே சமைத்து பரிமாறக் கூடாது. செலவும் குறைவு. வருபவர்கள் வயிறும் குளிர்ந்து உங்கள் சமையல் திறமையையும் பாராட்டுவார்களே! அதோடு, அலுவலகத்துக்கு செல்லும்போது கையில் ‘லன்ச்’ கொண்டு செல்லுங்கள். ‘வெளியில் சாப்பிட்டுக்கறேன்’ என்று போனால், அது பெரிய அளவில் செலவை இழுத்துவிடும் ஆபத்து இருக்கிறது.
18. வெஜிடேரியனா? நான்&வெஜிடேரியனா?
‘நான்&-வெஜிடேரியன்’ என்றால் வெஜிடேரியனுக்கே மாறிவிடுவது சேமிப்புக்கு மட்டுமல்ல, உடலுக்கும் நல்லது. மாற முடியாதவர்கள் வாரம் ஒருமுறை தான் ‘நான்-வெஜ்’ என்று ஒரு எல்லை வைத்துக் கொள்ளலாம்.
19. தவிர்க்க முடியாத பள்ளிக் கட்டணம்!
பிள்ளைகளின் பள்ளிக் கட்டணங்கள் தவிர்க்க முடியாதவைதான். உங்கள் பிள்ளைகள் தனியார் பள்ளிகளில் படித்து, அங்கே கட்டணங்கள் அதிகரித்து வரும் வேளையில், பெற்றோர் ஆசிரியர் கழக மீட்டிங்குகளில் அந்தக் கட்டண உயர்வு பற்றி கூற மறக்காதீர்கள். அது அந்த நிர்வாகத்தை ‘இரண்டு பேர் கேள்வி கேட்கிறார்களே’ என்று கவனிக்க வைக்கும். கட்டணங்களை கூட்டும் முன்பு சிறிதாவது யோசிப்பார்கள்.
20. கடன் வாங்கி முதலீடா?
பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அல்லது தங்கத்தில் முதலீடு செய்ய என பலர் கடன் வாங்குகிறார்கள். தற்போது உலகளவில் பொருளாதார சூழ்நிலை சரியில்லாததால் கடன் வாங்கி முதலீடு செய்வது அத்தனை உகந்ததல்ல.
21. டியூசன் எடுக்கலாமா?
சில இல்லத்தரசிகள் நன்கு படித்து வேலை பார்க்காமல் இருக்கலாம். டியூசன் எடுப்பது அவர்களுக்கு ஒரு நல்ல பார்ட் டைம் வேலை! பெரிய நகரங்களில் சப்ஜெக்ட் வாரியாகவே டியூசன் எடுக்கிறார்கள். எந்த சப்ஜெட்டில் உங்கள் நீங்கள் திறமைசாலியோ அந்த சப்ஜெட்டை எடுக்கலாம். டியூஷன்தான் என்றில்லை.. பொழுதுபோக்காக நீங்கள் கற்று வைத்திருக்கும் விஷயங்களை அசைபோட்டு பாருங்கள்.. அதிலேயே கூட அட்டகாசமான வருவாய் தரும் சூட்சுமம் ஒளிந்திருக்கும்.
22. குழந்தைகளுக்கு சேமிப்பை கற்றுக் கொடுங்கள்!
நீங்கள் சேமிப்பதோடு உங்கள் பிள்ளைகளுக்கு சேமிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டியதும் முக்கியம். அவர்களுக்கு மாதாமாதம் தேவையான அளவு பணம் கொடுத்து அவர்களின் செலவுகளை அவர்களையே செய்துவரச் சொல்லுங்கள். இது நிச்சயமாக நல்ல பலன்களை தரும். நீங்கள் அசந்துபோகும் அளவுக்கு நிறைய சேர்த்து வைத்திருப்பார்கள்!
23. அடுத்தவர் என்ன நினைப்பார்?
அடுத்தவர் என்ன நினைப்பார் என்ற நினைப்பிலே நாம் பெரும்பாலும் அதிகம் செலவழிக்கிறோம். அதைத் தவிர்த்தாலே ஒரு பெரிய சேமிப்பு ஏற்படும்.
24. செலவு செய்யும் முன்பு ஒரு நிமிடம் யோசியுங்கள்!
எந்த செலவையும் செய்யும் முன்பு ‘இது தேவையான செலவுதானா?’ என்று ஒரு நிமிடம் யோசியுங்கள். தேவைப்படாத எந்த ஒருபொருளையும் மிகமிக குறைந்த விலையில் கிடைத்தாலும் வாங்காதீர்க்ள். அதேபோல், எந்த ஒரு செலவிலுமே நம் தேவைக்கு சிறிதும் குறைவு வைக்காத.. ஆனால் சேமிப்பை தரும் விஷயங்கள் இருக்கின்றன. கவனித்து செயல்படப் பாருங்கள்!
25. கிரியேட்டிவ்&ஆக இருங்கள்!
எந்த ஒரு விஷயத்திலும் கிரியேட்டிவ்வாக இருப்பதே ஒரு வகையில் சேமிப்பைத் தரும். ‘அவுட்டிங்’ போவதற்கு பதிலாக வீட்டிலேயே குடும்பத்தினரோடு புதுமையான ‘இன்டோர்’ கேம்ஸ் விளையாடுவது, எல்லாவற்றையும் குப்பை என வெளியே தள்ளாமல் அதில் பயன்படுத்த வழிகள் பார்ப்பது.. இவற்றாலும் வீட்டில் பணம் செழிக்கும்.

Right To Emergancy Care




ஒருவர் விபத்திற்குள்ளாகி மருத்துவ முதலுதவி தேவைப்படும் நிலையில் இருக்கும்போது முதலுதவி தர மறுத்தும், காவல் துறை சம்பிரதாயங்களுக்காகவும் கட்டாயப்படுத்தும் மருத்துவமனைகளுக்கெதிரான
"அவசர சிகிச்சைகளுக்கான உரிமை" - உச்சநீதிமன்ற ஆணையின் மூலம் நிலை நிறுத்தப் படுகிறது!

நாம் அந்நபரை அருகிலிருக்கும் எந்த ஒரு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றாலே போதும்! முதலுதவி மற்றும் காவல் துறைக்கு தகவல் கொடுத்தல் போன்றவை அம்மருத்துவமனைகளுக்கே உரிய கடமை என்று வலியுறுத்தப் படுகிறது!

பயனுள்ள முகவரிகள்-அரசு சேவைகள்

இந்திய அரசின் இணையச் சேவைகளுக்கு இங்கே க்ளிக் செய்யவும்

தமிழ் நாடு தேர்தல் ஆணையம்: வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? பார்க்கவும்

தமிழ் நாடு : வட்டார போக்குவரத்து அலுவலர்களின் அலுவலகங்களுக்கான இணைய வழி சேவை இங்கே

தமிழக அரசு திருமணப் பதிவுச் சான்று எப்படி பெறுவது? http://regn.tn.nic.in/services.htm

The application form for the registration of a marriage and related forms can be downloaded from

http://regn.tn.nic.in/application_forms.htm

Requests for obtaining marriage certificates from computerised offices can be

submitted online at http://www.tnreginet.net/igregn/webAppln/index.asp


முக்கிய தேர்வு முடிவுகளை இணயத்தில் உட னே பார்க்க clickhere


இந்திய அஞ்சல் துறை:

The Indian Postal Department offers many online services, which include tracking

Speed Post and Express Parcel consignments destined to National Speed Post Centres.

This service, offered on www.indiapost.gov.in ,

allows you to track the movement as well as delivery of your parcels and consignments.

* Track

Movement of Speed Post Articles and Express parcels

* Track

Delivery Records of Speed Post and Express Parcel consignments

இந்திய விவசாய விளைபொருள் இன்றைய விலை விபரம் அறிய

Visit the Agmarknet portal


இந்திய ரயில்வே: ரயில் முன் பதிவுக்கு இங்கே


தமிழ் நாடு வேலை வாய்ப்புத் துறை:

The Job Seekers registered at Professional & Executive Employment Office

(PEEO) can post their resume and service details, for better

prospects. Online

renewal facility is facilitated over the web.இங்கே


இணையம் வழி பாஸ்போர்ட் அப்ளிகேசன் பதிவு செய்ய,

சென்னை பாஸ்போர்ட் அலுவலகம் clickhere

Check Your Passport Status at regional passport office.here


தமிழக அரசு நில விபரம்:புறம்போக்கு நிலமா தனியார் நிலமா என இங்கே அறியலாம்

மெட்ரொ வாட்டர் தண்ணீர் வரி விபரம் அறிய Checkhere

உணவு வழங்கல் மற்றும் நுகர் பொருள் பாதுகாப்பு குறைகள் தீர்கக clickhere


இணையம் வழி மின் கட்டணம் செலுத்த (Applicable only to chennai customers) here

தமிழ் நாடு மின்சார வாரிய புகார்கள் பதிவு செய்ய here

இணையத்தில் தமிழ் பல்கலைக் கழகம் clickhere

உங்கள் பகுதியில் ஆர் டி ஓ (RTO) அலுவலகம் எங்குள்ளது? அறிய

Register Online For Tamil Nadu Public Service Commission Recruitment Examinations here

POGOPLUG




1Gbக்கு ஒரு டாலர் என்ற கணக்கில் ஹார்ட்டிரைவுகள் விற்ற காலங்கள் நினைவுக்கு வருகின்றன.நான் கூட இரு வருடங்களுக்கு முன்பு 500 Gb external ஹார்டிரைவ் ஒன்றை 200 டாலருக்கு வாங்கிய நியாபகம். நேற்றைக்கு 1.5Tbஹார்டிரைவ் 118 டாலருக்கு பார்த்தேன். மடமடவென விலை இறங்கியிருக்கின்றது. டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள் எனப்படும் மேசை கணிணிகளின் அந்திமக்காலம் நெருங்கிவிட்ட நிலையில் இடத்தை ரொம்பவும் ஆக்கிரமிக்காத மடிக்கணிணிகளே இன்றைக்கு வீடுகளில் ஒன்றுக்கு இரண்டு கிடக்கின்றன.1.5Tb external செங்கற்கட்டியை மடிக்கணிணியின் USB போர்ட்டில் செருகிக்கொண்டு நகர்வதில் நம் "Mobility"-யே தொலைந்துவிடுகின்றது. அதிலிருக்கும் மூவி ஒன்றை பார்க்க வேண்டுமானால் ஒரு மூலையிலேயே ஒண்டி இருக்க வேண்டுமாக்கும். External ஹார்டிரைவை ஒரு மூலையிலே சாத்தி வைத்துக் கொண்டு நாம் நகர்ந்துகொண்டே அதிலிருக்கும் கோப்புகளை படிக்க வசதியுள்ளதா?

இரண்டு சாத்தியங்கள் உள்ளன.
ஒன்று உங்கள் external ஹார்டிரைவை வாங்கும் போதே அது NAS வசதி கொண்டதாய் இருப்பதாய் பார்த்துக் கொள்ளவேண்டும். விலை கொஞ்சம் அதிகம்.
இரண்டு புதிதாக வந்துள்ள Pogoplug.
http://www.pogoplug.com
இந்த வெள்ளை நிற டப்பாவின் ஒரு முனையில் USB போர்ட்டும் மறுமுனையில் நெட்வொர்க் போர்டும் இருக்க அதன் USB போர்டில் உங்கள் external ஹார்டிரைவை இணைத்துவிட்டு அந்த போகோபிளக்கை உங்கள் வீட்டு கம்பியில்லா நெட்வொர்க்கில் இணைத்தால் You are done. அந்த external ஹார்டிரைவை உலகில் எங்கிருந்து வேண்டுமானாலும் நீங்கள் அணுகலாமாம். ஒன்றுக்கு மேற்பட்ட ஹார்டிரைவுகளை கூட நீங்கள் அதனோடு இணைத்துக் கொள்ளலாம். விலை 79 டாலர். இது போன்ற ஒரு அற்புத பொட்டிக்காகத் தான் நான் காத்திருந்தேன்.

கொஞ்சம் யோசித்துப்பார்த்தால் ஏன் இது மாதிரியான "obvious"-ஆன படைப்புகளை கூட ஐ.டியில் உச்சத்திலிருக்கும் நம்மால் உருவாக்க முடியவில்லை அல்லது உருவாக்காமல் இருக்கின்றோம். சூப்பர் கணிணிகளை செய்கின்றோம் என்கின்றார்கள். நமக்கு தெரிந்து எதாவது புதுமையான ஹார்டுவேர் நம்மூரிலிருந்து ஜனனமாகியிருக்கின்றதா? ஒருவேளை காசுள்ள நம் பெருசுகளுக்கு R&D ல் பணம் போட மனமில்லையோ? யாரோ வகுத்துச் சொன்னதை தானே நாம் "கோட்"களால் படைக்கின்றோம் புதிதாக எதாவது செய்தோமா?.Hotmail-யை உருவாக்கிய சபீர்பாட்டியாவும் கொஞ்சம் புகழ் கொண்ட நம் Tally-யையும் தவிர வேறு நினைவுக்கு வரவில்லை. அணுகுண்டால் எதிரியை அதிரவைத்தான் ஒரு தமிழன்.இன்னொருவனோ ஒன்றுக்கு இரண்டு ஆஸ்கார்களை அள்ளி வந்திருக்கின்றான்.இன்னொரு தமிழன் சந்திரனுக்கே உளவு அனுப்பினது நினைவிருக்கலாம். இப்படி நாம் அவரவர் துறையில் மவுனமாய் சாதித்தால் கையாலாகாதவன் கூட எதாவது காரியமாகப் பார்ப்பான் போலிருக்கின்றது.
(கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேனோ? I always do)

கணிணியின் ஆழ்துயில் - Hibernate



இப்போது வந்துள்ள புதுவகையான SSD (Solid State Drive) ஹார்டு டிரைவுகள் கணிணியின் வேகத்தை வெகுவாக கூட்டியுள்ளதாம். கணிணியின் பூட்டிங்கிலிருந்து மற்ற எல்லா வேலைகளும் வெகு விரைவாக இருப்பதால் ஒருமுறை SSD உள்ள கணிணியில் வேலை செய்த பின் சாதாரண சுழல்தட்டுள்ள ஹார்டிரைவில் வேலை செய்வது மிக கடினமாக உள்ளதாக சொல்கின்றார்கள். இப்போது நெட்புக்குகளில் சராமாரியாக வரும் இவை விரைவில் கார்பரேட் செர்வர்களையும் நோக்கி பயணிக்கும் போலிருக்கின்றது. இந்த NAND சில்லு SSD -டிரைவுகள் சீக்கிரத்தில் இன்றைய கிளாசிக் ஹார்ட்டிஸ்குகளை பலி கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

என் கணிணி வேகமாக பூட்டாகிவர நான் பயன்படுத்தும் பழங்கால டெக்னிக் ஹைபர்னேசன்.(Hibernation). வெண்பனி பொழிந்து எங்கும் குளிர் நிறைந்து கிடக்கும் இக்குளிர்காலத்தில் மனிதர் நாம் Fireplace-யை நாடுகிறோம்.அப்பாவி மிருகங்கள் என்ன செய்யுமாம்.


குளிர்காலம் வந்ததும் அவை தம் குகைகளிலே ஆழ்நிலை தூக்கத்திற்கு போய்விடும் என்கின்றார்கள்.அவை மேல் பரந்திருக்கும் ரோமங்கள் சிறிது உஷ்ணம் கொடுக்கும் அதேவேளையில் உடலில் அவை அது நாளும் சேமித்து வைத்திருந்த கொழுப்பு அவை உயிர்காக்கும். கதிரவன் எட்டிப்பார்க்கும் வசந்தகாலம் வந்ததும் இத்துயிலிருந்து எழும்பி மீண்டும் இரை தேட ஓடத் தொடங்கும். இந்த இயக்கம் தான் ஹைபர்னேசன்.

கணிணியிலும் இந்த ஹைபர்னேசனை Biomimicry செய்துவிட்டார்கள். எப்படி?

நான் விண்டோசை வேகமாக கொண்டுவருவதற்காக கணிணியை Shutdown செய்யாமல் Hibernate செய்வதுண்டு. நாம் hibernate செய்யும் போது அப்போது திறக்கப்பட்டிருக்கும் நம் பயன்பாடுகள், ஓடிக்கொண்டிருக்கும் நம் மென்பொருள்கள் எல்லாம் மூடப்படாமல் அப்படியே உறைந்து நம் கணிணியில் ஒரு கோப்பில் சேமிக்கப்படும். அதனால் மீண்டும் உங்கள் கணிணியை நீங்கள் தொடக்கும் போது மிக வேகமாக திறந்து ஏற்கனவே முன்பு நீங்கள் திறந்துவைத்திருந்த உங்கள் பயன்பாடுகளையும், ஓடிக்கொண்டிருந்த மென்பொருள்களையும் மீண்டும் கொண்டு வந்து தொடரும்.Shutdown செய்யாமல் ஹைபர்னேட் செய்யும் போது அப்போது உங்கள் கணிணியின் நினைவகத்தில் ஓடிக்கொண்டிருந்த எல்லா சமாச்சாரமும் hiberfil.sys எனும் கோப்பில் உறைந்து சேமிக்கப்படுவதால் இது சாத்தியமாகின்றது. உபுண்டுவில் இதை .hibernate.img என்பார்களாம்.

Real basic - உண்மை பேசிக்


மைக்ரோசாப்டின் விண்டோஸ், ஆப்பிளின் மேகிண்டாஷ், இலவச லினக்ஸ் என முப்பெரும் கணிணிநடை பாதைகள் இருந்தாலும் சீக்கிரமே ஒன்று மட்டுமே நிலைத்திருக்கும் காலம் வந்துவிடும் போலிருக்கின்றது. குறைந்த விலையில் ($199) வெளியாகும் நெட்புக்குகள், அதிவேக இணைய இணைப்புகள், அதனால் ராக்கெட் வேகத்தில் வளர்ந்து வரும் மேக கம்ப்யூட்டிங் (Cloud computing) முறைமை மைக்ரோசாப்டின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. கூகிள் கொண்டு வரவிருக்கும்(?) ஜிடிரைவ் இன்னொரு கண்டம். அது வந்துவிட்டால் External ஹார்ட் டிரைவுகள், CD, DVD மற்றும் USB Flash டிரைவுகளின் மார்க்கெட் படுத்து விடலாம். எல்லா கோப்புகளையுமே நாம் இணைய ஜிடிரைவ் மையத்தில் சேமித்து வைத்துக் கொள்ளலாமே.பிறகு எங்கிருந்து வேண்டுமானாலும் அவற்றை எடுத்துக் கொள்ளலாமே.

கணிணி உதவியின்றி நேரடி இண்டர்நெட் இணைப்பு வசதியோடு வரும் இன்றைய HDTV-யில் இரட்டைசொடுக்கி உங்கள் ஜிடிரைவில் நீங்கள் சேமித்துவைத்திருக்கும் மூவியை பார்க்கலாம்.அதிவேக இணைய இணைப்பால் இன்றைக்கு இது எல்லாமே சாத்தியம்.

சாமானியர்களுக்கு இத்தனை சக்திகொண்ட வன்பொருள்களும் மென்பொருள்களும் எதற்கு? இணையம் மேயவும் சில கோப்புகளை கோர்க்கவும் சாதாரண இலவச லினக்சே போதுமானது என்பதால் பத்துவருடங்கள் முன்னோக்கிப் பார்த்தால் விண்டோஸ் மற்றும் மேகிண்டாஷின் மார்கெட்ஷேர் காணாமல் போயிருக்கலாம்.

REALbasic என்றொரு மென்பொட்டலம். புரோகிராமிங் மொழியான விசுவல் பேசிக் போன்றே இயங்குகின்றது. ஆனால் இதன் விசேசம் இதனால் உங்கள் விண்டோஸ் கணிணியில் உருவாக்கப்படும் ஒரு பயன்பாட்டை அப்படியே மேகிண்டாசிலும் லினக்சிலும் ஓட விடலாம். அதாவது இது Cross-compiler வசதியைக் கொண்டுள்ளது PureBasic-ம் இதே சக்தி கொண்டிருப்பதாக சொல்கின்றார்கள். ஒரு பிளாட்பார்மில் எழுதி பல பிளாட்பார்ம்களில் ஓடவிட இதொரு நல்ல வழி.

Google Latitude




ரொம்ப நாளைக்கப்புறமாய் கூகிளிடமிருந்து சத்தமேயில்லாமல் "வாவ்" என சொல்ல வைக்கும் வசதி ஒன்று வெளியிடப் பட்டிருக்கின்றது. வேண்டாம் எனச் சொல்லியும் கேட்காமல் கார் ஷோ பார்க்கப்போகின்றேன் என கடும் பனிப்பொழிவிலும் கிளம்பிச்சென்றான் கோபால். சிக்காகோவிலிருந்து டெட்ராயிட் போக ஐந்து மணி நேரமாகும். பாதிவழியியே அவனிடமிருந்து போன் கால் வந்தது.தெரியாமல் புறப்பட்டு விட்டேன்டா ரோடு எங்கே கிடக்குனே தெரியல்லை பயங்கர ஸ்னோ என்றான். இவன் டெட்ராயிட் போய் சேர்ந்தானா இல்லையா, இப்போதைக்கு எங்கே இருக்கின்றான் என அவன் நகர்வை கண்காணித்துக் கொண்டே இருக்க கூகிள் வசதி செய்திருக்கின்றது. திருமணம் ஒன்றில் கலந்துகொள்ள சென்னையிலிருந்து தஞ்சாவூருக்கு பேருந்தில் புறப்பட்ட நண்பன் இப்போதைக்கு எங்கே இருக்கின்றான் எனவும் டிராக் செய்யலாம். எல்லாம் Google Latitude எனும் வசதிதான்.இந்த வசதியை கூகிள் மேப்பின் மீது வைத்துள்ளார்கள். இந்த வசதி மூலம் ஒரு நபரின் நகர்வை real time-ல் நீங்கள் கண்காணித்துக் கொண்டேயிருக்கலாம். என்ன அவரிடம் ஒரு ஸ்மார்ட்போன் இருக்கவேண்டும்.அது Blackberry-யாகவோ Symbian S60-யாகவோ, அல்லது Windows Mobile-லாகவோ இருக்கலாம். Android மற்றும் iPhone-ல் இன்னும் சில நாட்களில் இவ்வசதி வரஉள்ளது. கூகிளின் cell tower database மற்றும் உங்கள் போனின் cell ID அல்லது GPS location detection வசதி இந்த நுட்பத்திற்காக பயன்படுத்தப்படும். யாருக்கெல்லாம் இம்மாதிரி உங்கள் இருப்பிடத்தை காட்டலாம், யாருக்கெல்லாம் இம்மாதிரி உங்கள் இருப்பிடத்தை காட்டக்கூடாதுவென பிரைவசி வசதியும் உள்ளதாக கூகிளிலிருந்து சொல்லியிருக்கின்றார்கள். பாண்டிச்சேரியில் நீங்கள் பூரித்திருக்க பொய்யாக உங்கள் தற்போதைய இருப்பிடமாக உங்கள் அலுவலகத்தையும் காட்டலாமாம். புல்லரிக்கவைக்கும் வசதி தான். ஆனால் ஏனோ பயமாயும் இருக்கின்றது.

http://www.google.com/latitude

2 Cool word operations that u don't know before

Trick 1:
*-*-*-*-*
MS office word-ல் அல்லது Outlook-ல் மவுசை தொடாமலேயே வெறும் தட்டச்சுபலகையை தட்டி எளிதாக கட்டம் போட்டு அட்டவணை போடும் முறையை நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார்.மிகவும் பிடித்திருந்தது.இங்கே உங்களுக்கும் அறிமுகப்படுத்துகிறேன். இது ரொம்பவும் பழைய டிரிக் என்று சொல்பவர்கள் தயவு செய்து மன்னிக்கவும்.




Trick 2
*-*-*-*-

எதோ ஒரு காரணத்துக்காக ஒரு சாம்பிள் word டாக்குமெண்ட் 100 பக்கத்துடன் வேண்டுமா? தேடிக்கொண்டிருக்க வேண்டாம்.ஒரே நொடியில் நீங்களே உருவாக்கிவிடலாம்.MS office word-ஐ திறந்து =rand(10,50) என டைப்பி enter-ஐ தட்டுங்கள். ஒரே நொடியில் 50 வரிகளுடன் 10 பாராகிராப்புகளுடைய ஒரு பெரிய டாக்குமெண்ட் ரெடி. அந்த The quick brown fox jumps over the lazy dog வரிகள் ஆங்கிலத்தின் 26 எழுத்துக்களையும் கொண்டுள்ளதால் எளிதாக உங்கள் "Font" -ஐ சரிபார்த்துக் கொள்ளலாம். இதுமாதிரி எல்லா ஆங்கில எழுத்துக்களையும் கொண்டு எழுதப்படும் வாக்கியத்தை pangram என்பார்கள். முன்பெல்லாம் தட்டச்சு எந்திரத்தின் எல்லா அச்சுகளும் சரியாக வேலை செய்கின்றனவாவென பார்க்க இந்த வாக்கியத்தை முதலில் காகிதத்தில் அடித்து சரி பார்ப்பார்களாம்.Mr. Jock, TV quiz PhD, bags few lynx சரியாக 26 எழுத்துகள் மட்டுமே கொண்டது. எனக்கு பிடித்த pangram இதுதான்.
Pack my box with five dozen liquor jugs.

3G - Tamil technology


முன்பெல்லாம் GPRS என்கின்ற பெயரில் டயல்அப் இணைப்பு வேகத்தில் ”எங்கிருந்தாலும் இணையம்” வசதியை பெற்றிருப்பீர்கள். அதை 2.5G என்பார்கள். இப்போது அதே GPRS இன்னும் ஒரு படி முன்னேறி 3G எனும் பெயரில் வந்திருக்கின்றது. அட்டகாச வேகம் நீங்கள் எங்கிருந்தாலும் கிடைக்கும் குறிப்பாக மெட்ரோ ஏரியாவில். வீட்டிலும் விமானநிலையத்திலும் நீங்கள் Wifi பயன்படுத்தினால் வழியில் நீங்கள் 3G பயன்படுத்தலாம். யூடியூப் வீடியோ கூட சிக்கலின்றி தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டே பயணிக்கலாம். எங்கிருந்தாலும் இணையம் கிடைக்குமென்றால் அது 3G. அங்கிருந்தால் மட்டுமே இணையம் கிடைக்குமென்றால் அது WiFi.

இப்போதைக்கு இந்த 3G வசதி கைப்பேசிகளில் மட்டுமே இருந்து வருகின்றது. அதுவும் ஸ்மார்ட் ஃபோன்கள் எனப்படும் நோக்கியாவின் N வரிசைபோன்கள், ஆப்பிளின் ஐபோன்கள்,RIM-ன் பிளாக்பெர்ரிகளில் இதைக் காணலாம். ஏறக்குறைய ஒரு கணிணியின் வேலையையே முழுதாக செய்யும் இந்த ஸ்மார்ட்போன்களை நாம் கணிணியாகவே கணித்தோமானால் இன்றைக்கு உலகின் நம்பர் ஒன் கணிணி தயாரிப்பாளார் இடத்துக்கு நோக்கியா வந்துவிடுவார். அதை அடுத்துதான் HP, Dell வந்து மீண்டும் நான்காம் இடத்தை ஆப்பிள் பிடிக்கும். மடிக்கணிணியை கண்டு பிடித்த டொசீபா-வே 7 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டு விட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஏற்கனவே கைப்பேசிகளில் இருக்கும் கேமராக்களை கணக்கில் கொண்டால் உலகில் அதிக அளவு காமெரா தயாரிப்பாளர் என்ற பெயர் நோக்கியாவிற்கே போய்விடுகின்றது.

இந்திய முகங்களை பார்க்க கடந்த முறை சிக்காகோ Devon Ave-போக வழிதவறிய போது iPhone 3G-யின் GPS ரொம்பவே உதவியாக இருந்தது. இந்த 3G வசதியை சீக்கிரத்தில் மடிக்கணிணிகளும் தன்னகத்தே கொண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சந்தைகளில் ஏற்கனவே இத்தகைய மடிக்கணிணிகள் நெட்புக்குகள் இருக்கலாம். இதனால் போகுமிடமெங்கும் அதிவேக இணைய இணைப்பு உங்கள் மடிக்கணிணியில் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் அங்கும் ஒரு சிம் கார்டு போட வேண்டி இருக்குமோ?

சென்னையில் இது போல போகுமிடமெல்லாம் இணைய இணைப்பு வேண்டுமானால் இப்போதைக்கு இரண்டு சேவைகள் உள்ளனவென நண்பர் முகம்மது இஸ்மாயில்.H, PHD தெரிவித்திருந்தார்.

ஒன்று BSNL-ன் EVDO (Evolution-Data Optimized) சேவை.மாதம் 550 ரூபாயாம். எவ்வளவு வேண்டுமானாலும் வலைமேய்ந்து கொள்ளலாம். குறைந்த பட்சவேகம் 256 Kbps-ஆகவும் அதிக பட்சவேகம் 1024Kbps ஆகவும் இருக்கும். ஒரு PCMCIA கார்டு (BSNL data card ) கொடுப்பார்கள் அல்லது USB மோடமாகவும் வாங்கிக்கொள்ளலாம்.அதை உங்கள் மடிக்கணிணியில் செருகிக் கொள்ளவேண்டும். அவ்ளோதான். இவ்வசதி பெரும்பாலான தமிழக நகரங்களிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.வேகம் தான் வித்தியாசப்படலாம். Rental அல்லது Purchase செய்யவும் வசதி கொடுத்திருக்கின்றார்கள்.

இவ்வசதிஉள்ள நகரங்களின் வரிசையை பார்க்க கீழே சொடுக்கவும்
http://bsnlevdoclub.com/bsnl-evdo-coverage/bsnl-evdo-enabled-cities-in-india/

சென்னையில் எங்கெங்கு எவ்வளவு EVDO வேகம் கிடைக்கும் என இங்கே பார்த்து அறிந்து கொள்ளலாம்.
http://chennai.bsnl.co.in/News/EVDO_BTS.htm

மேலும் விவரங்களுக்கு
http://chennai.bsnl.co.in/News/EVDO.htm

இன்னொன்று Tata Indicom-ன் Photon சேவை. மாதம் 1500 ரூபாயாம். ஒரு USB மோடம் கொடுப்பார்கள்.சென்னையில் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே இது வேலை செய்கின்றது.
http://www.tataindicom.com/HSIA-photon-usb-personal.aspx

3G சேவை எப்போது சென்னைக்கு வருகின்றதாம்?
தேர்தலுக்கு கொஞ்ச நாட்களுக்கு முன்பு பெட்ரோல் விலையை குறைத்து விலைவாசி குறைந்துவிட்டது என படம் காட்டுவது போல 3G-யையும் வெளியிட்டு ஒளிருகின்றோம் என்று சொன்னாலும் சொல்வார்கள்.

Virtual Box - விர்சுவல்பாக்ஸ்




பெரும்பாலான டெல், டொஷீபா, எச்பி, ஐபிஎம் லெனோவா, சோனி போன்ற நிறுவனங்களின் மடிக்கணிணிகளை வாங்கும்போது இன்றைக்கு அவை கூடவே விண்டோஸ் விஸ்டாவோடு கூட வரும்.இவை OEM எனப்படும் original equipment manufacturer மென்பொருள் உரிமமோடு வருகின்றன.அதாவது உங்கள் மடிக்கணிணியோடு கூட வரும் விண்டோஸ் விஸ்டா ஒரிஜினல் விண்டோஸ் விஸ்டாவாகும்.அந்த வின்டோஸ் விஸ்டாவுக்கான விலையையும் சேர்த்து கொடுத்துதான் அந்த மடிக்கணிணியை நீங்கள் வாங்கியிருக்கின்றீர்கள் என்று பொருள். உங்கள் மடிக்கணிணியின் பின்னால் ஒட்டப்பட்டிருக்கும் அந்த பச்சக் கலரு சான்றிதழ் தான் அதற்கான அத்தாட்சி.

நீங்கள் இதுமாதிரியான ஒரிஜினல் வின்டோஸ் வைத்திருப்பதால் முதல் நன்மை உங்கள் வின்டோசால் எளிதாக இணையம் வழி அவ்வப்போது மைக்ரோசாப்டின் "Windows update" செர்வரோடு தொடர்புகொண்டு உங்கள் கணிணியின் விண்டோசின் ஓட்டை ஒடசல்களையெல்லாம் சரியாக்கி கொண்டே வரும். இதனால் அநேக வைரஸ்களிடமிருந்தும் ஹேக்கர்களிடமிருந்தும் நீங்கள் தப்பித்துக்கொள்ளலாம். இன்னொரு நன்மை உங்கள் கணிணியில் என்ன பிரச்சனை வந்தாலும் மைக்ரோசாப்ட் ஐயா அவர்களின் சப்போர்ட் டிப்பார்ட்மென்டை தைரியமாகத் தொடர்புகொள்ளலாம்.

ஆனால் பெரும்பாலான நம்மவர்கள் செய்யும் தவறு என்னவென்றால் நம் மடிக்கணிணியோடு வந்த விண்டோஸ் விஸ்டா அல்லது எக்ஸ்பி Home edition ஆக இருப்பதால் அது வழி நிறைய சாதிக்க முடிவதில்லை. நொண்டது நொடிச்சதுக்கெல்லாம் அழும்.IIS இருக்காது.அது முடியாது.இது முடியாது என கரைந்துகொண்டே இருக்கும்.ஆனால் மடிக்கணிணியோ 4கிக் மெமரியுடனும் 300கிக் ஹார்ட் டிரைவுடனும் எதையும் தாங்க தயாரான நிலையிலிருக்கும்.

இவ்வேளைகளில் இருக்கின்ற உங்களின் ஒரிஜினல் வின்டோஸ் விஸ்டாவை தூக்கிவிட்டு அதற்கு பதிலாக ஒரு கிராக் செய்யப்பட்ட வின்டோஸ் செர்வரை உங்கள் மடிக்கணிணியில் நிறுவுவது அவ்வளவு புத்திசாலித்தனமல்ல.

இங்கு நீங்கள் விர்சுவல் செர்வரை பயன்படுத்தலாம்.அதாவது உங்கள் வின்டோஸ் விஸ்டாவினுள்ளேயே இன்னொரு வின்டோஸ் செர்வரை ஓட்டலாம்.இதனால் உங்கள் விஸ்டா ஒரிஜினலாக இருந்து கொண்டே உங்களுக்கு பாதுகாப்பைத் தரும் அதேவேளையில் கிராக்கப்பட்ட விண்டோஸ் செர்வரை விர்சுவர் செர்வராக உங்கள் மடிக்கணிணியில் ஓட்டுவதால் உங்களுக்கு கூழும் கிடைக்கும் மீசையும் பாதுகாப்பாயிருக்கும்.இதற்காக VMware Workstation அல்லது Microsoft Virtual PC போன்ற விர்சுவல் செய்யும் மென்பொருள்களை நீங்கள் பயன்படுத்தலாம். என்ன கொஞ்சம் காசு கேட்பார்கள். இதனால் அவைகளுக்கு பைபை சொல்லிவிட்டு இலவச விர்சுவலைசேசன் மென்பொருள் பக்கம் வரலாம்.சன் நிறுவனத்தின் திறந்த மூல படைப்பான VirtualBox-ஐ பயன்படுத்தலாம். இம்மென்பொருள் இலவசமாக கிடைக்கின்றது. ஒருமுறை முயன்றுபாருங்கள்.விடவே மாட்டீர்கள்.உண்மையிலேயே இதை பயன்படுத்துவது மிக எளிது.இவ்வளவு நாளாக இதை மிஸ் பண்ணியிருந்தோமே என்று பின்பு தோன்றும்.(மேலே படத்தில் லினக்ஸினுள் வின்டோஸ் ஓடுவதை காணலாம்)

Download Virtual box here.
http://www.virtualbox.org/wiki/Downloads

WiMax - An intro

அஃறிணைப் பொருட்களெல்லாம் சீக்கிரத்தில் உயிர் கொண்டு விடும் என்பது எனது எண்ணம். வீட்டிலிருக்கும் பொருட்களும் சரி ஓடிக்கொண்டிருக்கும் வாகனங்களும் சரி முன்னெப்போதும் இல்லாத அளவில் "ஸ்மார்ட்" ஆகிக்கொண்டே வருகின்றன. அதன் முக்கிய பங்களிப்பு இவையெல்லாம் எளிதாக இணையத்தில் இணைக்கப்படுதல் தான். இப்போதெல்லாம் வாகனத்தில் பொருத்தப்படும் மைரோப்ராசசர்கள் உங்கள் கார் பற்றிய தகவல்களை உடனுக்குடன் அதன் சர்வீஸ் சென்டருக்குசொல்லிக் கொண்டிருக்க வீட்டிலிருக்கும் "கேஸ்" சிலிண்டரோ அதில் கேஸ் தீர்ந்துகொண்டிருப்பதை அதன் நிறுவனத்துக்கு அலெர்ட் செய்திருக்கும் வாய்ப்புண்டு. இதெல்லாம் சாத்தியமாக கட்டற்ற இணைய இணைப்பு தேவை.அது வைமேக்ஸ்(WiMAX) வடிவில் சாத்தியமாகும் போல் தோன்றுகிறது.

WiFi என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் அதாவது வீட்டில் அல்லது விமானநிலையத்தில் அல்லது காஃபிஷாப்பில் மட்டும் இஷ்டத்துக்கு இணைய இணைப்பை வழங்கும் இணைப்பு ஆனால் WiMAX-ஸோ நம்மூரின் மூலை முடுக்கெல்லாம் இணையத்தை வயர்லெஸ்ஸாய் வழங்க உதவ வந்திருக்கும் புதிய தொழில் நுட்பம். இது இன்னும் இதன் ஆரம்பகட்டங்களிலேயே உள்ளது. ஒரு நகரமுழுவதும் WiFi செய்யப்பட்டால் எப்படி இருக்கும் அப்படி இருக்கும் வைமாக்ஸ். அதிகபட்சமாக 70Mbps வேகம்.ஒரு டவர் வைத்தாலே அதன் 20 கிலோமீட்டர்கள் சுற்றளவுக்கு அதிவேக இணைய இணைப்பு வயர்லெஸ்ஸாய் கிடைக்கும்.Worldwide Interoperability for Microwave Access என்பதை தான் WiMAX என்கிறார்கள். இதை 802.16 என்றும் சொல்வதுண்டு (MAN-Metropolitan Area Network).இது சீக்கிரத்திலேயே கேபிள் மற்றும் DSL இணைய சேவைகளை தூக்கி சாப்பிட்டாலும் சாப்பிட்டுவிடும்.

சென்னையின் சந்துபொந்துகளையெல்லாம் பாவிக்கும் ஒரு WiMAX ரிலையன்சில் இருப்பதாக கேள்விப்பட்டேன்.
மேலதிக தகவல்கள் இதோ
150 Kbps - Rs.750/- Per month
400 Kbps - Rs.999/- Per month
600 Kbps - Rs.1399/- Per Month
1000 Kbps - Rs.2199/- Per Month

Installation Charges - Rs.500/- Only
Security Deposit - NIL

For further details call at 9962 200 300
http://www.reliancewimax.in

Aircel-ல்லும் WiMAX சேவையை சென்னையிலும் கோயம்புத்தூரிலும் வழங்குவதாக கேள்வி.